நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சபரகமுவ மாகாணத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை பொழிய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 2 மணிக்கு பின்னர் இடியுடனான கூடிய மழை பொழிய கூடும் என்பதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தின் மொனராகல, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இடைக்கிடை மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.