ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் நியமனம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் நியமனம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர்களாக நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரத்ன மற்றும் அநுர பிரயதர்ஷன யாபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(03) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..