வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு…
காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பகுதியில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபுருகல, பென்தர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த பொலிஸ் அதிகாரி களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றியவராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.