யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்…

யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்…

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.