நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை…

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை…

நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் மழை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரவமுவ, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களைத் தாண்டிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேலும், மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மொனறாகலை மாவட்டத்திலும் மணிக்கு 60 கிலோ மீற்றர்களை தாண்டிய வேகத்தில் காற்று வீசும் என்று திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.