கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – ஒருவர் கைது…

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – ஒருவர் கைது…

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான அசேல ரணசிங்க எனும் இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் நேற்று(08) சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.