கரையோரப் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை…

கரையோரப் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை…

தெஹிவளை கல்கிசை மற்றும் நீர்கொழும்பு கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மிரிஸ்ஸ கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அண்மையில் அகற்றப்பட்டன.
கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய, கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.