ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு…

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு…

ஹோமாகம நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கான தீர்ப்பு இன்று(14) வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.