ஞானசார தேரருக்கு 06 மாத கால சிறை…

ஞானசார தேரருக்கு 06 மாத கால சிறை…

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று(14) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் அவருக்கு 50,000 ரூபா நட்ட ஈடும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.