மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்;, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வடமத்திய மாகாணத்திலும், புத்தளம், மாத்தளை, மொனராகல, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.