போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் சந்தருவான் கைது…

போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் சந்தருவான் கைது…

பேலியகொடை பகுதியை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பிரதான போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் சந்தருவான் (26) காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகத்துக்குரியவரை கைது செய்யும்போது, அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயினும், கைக்குண்டு ஒன்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகத்துக்குரியவர், காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது டீ மஞ்சு எனப்படும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான குழுவிற்கு எதிரான குழுவை வழி நடத்தியவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.