மாத்தறை சம்பவம் – கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை…

மாத்தறை சம்பவம் – கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை…

மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான சாமர இந்திரஜித் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் இருந்த கைக்குண்டு ஒன்றின் மூலம் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பொலிஸார் சந்தேகநபரான சாமர இந்திரஜித் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.