சிறுத்தை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்…

சிறுத்தை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்…

கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுத்தையை தாக்கிய விதம் தொடர்பான நிழற்படங்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினூடாக பொலிஸ் நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிடைத்துள்ள நிழற்படங்களை ஆதாரமாகக் கொண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உத்தரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு நேற்று (22) பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு பொலிஸாரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.