இனி உள்நாட்டுத் தோல்விகளை இலங்கை அணி சந்திக்காது – ஹத்துருசிங்க..

இனி உள்நாட்டுத் தோல்விகளை இலங்கை அணி சந்திக்காது – ஹத்துருசிங்க..

இலங்கை கிரிக்கெட் அணியானது அடுத்த ஆண்டு மையப்பகுதியில் சிறந்த அணியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“.. சிறந்த அணி என்பது, சொந்த மண்ணில் மிகவும் அரிதாகவே தோல்வி அடையும்.
ஆனால் இலங்கை பல உள்நாட்டு போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளது.

தற்போது உள்நாட்டுத் தோல்விகளை தவிர்க்கும் நோக்கிலேயே அணி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நோக்கிலேயே தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை பயன்படுத்த திட்டமிட்டிருகிறோம்..” என ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.