தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று(28) பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சிலாபம் – கொழும்பு பேரூந்தின் ஓட்டுனர் ஒருவருக்கு கொழும்பில் வைத்து நேற்று(27) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமிந்த ஹங்ச தெரிவித்துள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு ஒன்றை வழங்காவிடின் சிலாபத்தில் இருந்து பயணிக்கு அனைத்து பேரூந்துகளும் போராட்டத்தில் ஈடுபடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

R.Rishma