சிறைக்கைதிகள் தினம் இன்று(12)… – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

சிறைக்கைதிகள் தினம் இன்று(12)… – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு..

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று(11)  அணிவிக்கப்பட்டது.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருவதுடன், சிறைக்கைதிகளுக்கான மருத்துவ சிகிச்சைகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கான பல்வேறு சமூக நலன்பேணல் திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.ஏ.டீ. சிறிசேனவினால் ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நீதியமைச்சர் தலதா அதுகோரள, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.