கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி…

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி…

வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்ணிவெடிகளை அகற்றி, பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என்று ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.