கடும் மழை – 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

கடும் மழை – 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…

தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கடும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.