மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் பஸ் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் விழுந்து, கவிழ்ந்தது.

இந்த கோரவிபத்தில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.