இராணுவ ஆயுத கிடங்கில் தீவிபத்து – 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்…

இராணுவ ஆயுத கிடங்கில் தீவிபத்து – 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்…

உக்ரைனில் இராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

6-வது பிரிவு ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இந்த தீ விபத்து காரணமாக இராணுவ ஆயுத கிடங்கு உள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை