சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலையில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி…

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலையில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்ட படிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று(11) உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 81 சைட்டம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.