கல்லூரியில் குண்டு வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு..

கல்லூரியில் குண்டு வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு..

உக்ரைனில் இருந்து பிரிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

எனினும், ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கிரிமியாவை அந்நாடு மக்கள் கருதி வருகின்றனர்.

இந்நிலையில், கிரிமியாவில் கருங்கடலையொட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.