துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது…

துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது…

சியம்பலாண்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரி56 ரக – 3000 துப்பாக்கி ரவைகளுடன் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ரவை தொகை சியம்பலாண்டுவயில் இருந்து காலி நோக்கி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைதுசெய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட சுஜியின் முக்கிய உதவியாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்த எம்.எம். வகையிலான 32 துப்பாக்கி ரவைகளும் சொகுசு ரக வேனொன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.