ரணிலுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்க சந்திரிக்கா களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சி முன்னாள் அமைச்சர்களிடம் மண்டி…

ரணிலுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்க சந்திரிக்கா களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சி முன்னாள் அமைச்சர்களிடம் மண்டி…

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நேற்று(29) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் 04 பேருடன் கலந்துரையாடியுள்ளார் என கூறப்படுகின்றது.

எனினும், இது வரையில் குறித்த முன்னாள் அமைச்சர்கள் ஆதரவினை வழங்கத் தயார் என தெரிவித்ததில்லை என மேலும் கூறப்படுகின்றது.