இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்வரை தங்களது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் நேற்று(09) கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பள உயர்வு தொடர்பான விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று(10) ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இந்த கலந்துரையாடலின் பிரகாரம் தமது எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.