பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்…

பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்…

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கருதி மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேரூந்து தரிப்புக் கூடத்திலிருந்து விசேட பேரூந்து சேவைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க தெரிவித்தார்.