கண்டி நகரத்தில் புதிய வேலைத் திட்டம்…

கண்டி நகரத்தில் புதிய வேலைத் திட்டம்…

கண்டி நகரத்தின் வளிமாசடைதலை குறைப்பதற்காக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபை இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்கீழ் 55 இலட்சம் பெறுமதியான நவீனதொழில் நுட்பத்துடன்கூடிய வளிமீளாய்வுப்பிரிவு கண்டி நகரமத்தியில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் குறித்த அந்தப்பிரிவின் ஊடாக வளி மாசடைதல் தொடர்பில் ஆராய்வதுடன் காற்றின்வேகம், வெப்ப நிலை தொடர்பிலான தகவல்களையும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.