தொழில் அதிபர் இல்ல திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்?
சமீபத்தில் நடந்த தொழில் அதிபர் அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான், ஆமிர்கான், ஐஸ்வர்யாராய் என பல்வேறு நட்சத்திரங்கள் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வாரக்கணக்கில் நடந்த திருமண நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் என நடந்தது. கணவர் அபிஷேக் பச்சனுடன் பங்கேற்ற ஐஸ்வர்யாராய் திடீரென்று மேடையில் ஏறி நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அமிதாப்பச்சன், ஆமிர்கான், ஐஸ்வர்யாராய் போன்ற பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.
இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தொழில் அதிபர் இல்ல திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்? என்று கேட்டதற்கு ஐஸ்வர்யாராய் கணவர் அபிஷேக் பச்சன் கூறும்போது,’இது மணமகள் வீட்டார் சார்பில் செய்யப்படும் ஒரு சம்பிரதாயம். அம்பானி இல்லத்தின் கூடுதல் குடும்ப அங்கத்தினர்களாக தங்களை இணைத்துக்கொண்டு திருமணத்தில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார்கள்’ என்றார்.