மஹிந்தவின் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பிரதமரால் செயலாளர்!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிய மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் 02ம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பொன்றினை முன்வைக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கட்சித் தலைவருக்காக இதுவரையில் இவ்வாறு மேலதிக செயலாளர் நியமிக்காத நிலையில், எதிர்கட்சித் தலைவரின் உதவிச் செயலாளருக்கு உயர்வாக குறித்த மேலதிக செயலாளர் நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.