சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுகளுடன் இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான, 174 சிகரட் பொதிகள், சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளவர் பன்னல பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.