முச்சக்கர வண்டி – வேன் நேருக்கு நேர் மோதியதில்  03வர் பலி…

முச்சக்கர வண்டி – வேன் நேருக்கு நேர் மோதியதில் 03வர் பலி…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொல்கஹவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்துள்ள குறித்த விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மற்றும் வயோதிப பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் பிள்ளைகள் மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.