கடுவலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை…

கடுவலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை…

(FASTNEWS|COLOMBO) கடுவலை – கொத்தலாவல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றிரவு(02) 30,000 ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணையை நவகமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.