மே 01ம் திகதியில் இருந்து தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு..

மே 01ம் திகதியில் இருந்து தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு..

(FASTGOSSIP | COLOMBO) – தனியார் துறையினருக்கான ஆகக் குறைந்த சம்பளமாக மே மாதம் 01ம் திகதியில் இருந்து 12,500 ரூபா வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தனியார் துறையினருக்கான ஆகக் குறைந்த சம்பளமாக ரூபா.10,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.