Boeing ரக விமானங்கள் மீளவும் சேவையில்…

Boeing ரக விமானங்கள் மீளவும் சேவையில்…

(FASTNEWS| COLOMBO)- தடை விதிக்கப்பட்ட Boeing 737 Max 8 ரக விமானங்களது பயணத்தினை மீளவும், ஆரம்பிக்க அமெரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, ஜூன் மாதம் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் எத்தியோப்பியா விமான சேவைக்கு உரித்தான Boeing 737 Max 8 ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதினைத் தொடர்ந்து Boeing 737 Max 8ரக விமானங்கள் வான் பரப்பில் பயணிக்க தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.