தீவிரவாதம் முடியவில்லை.. அவதானத்துடன் இருக்க வேண்டும் – பிரதமர்..

தீவிரவாதம் முடியவில்லை.. அவதானத்துடன் இருக்க வேண்டும் – பிரதமர்..

(FASTGOSSIP | COLOMBO) – தீவிரவாதத்  தாக்குதல் இத்துடன் நிறைவடைந்து விட்டதாக என்ன முடியாதுள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய மகாநாயக்க தேரர்களை கண்டியில் சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநேக சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை இல்ல எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.