‘நேசமணி’ டிரெண்டிங் முட்டாள்தனமானது கொதித்தெழுந்த காயத்ரி

‘நேசமணி’ டிரெண்டிங் முட்டாள்தனமானது கொதித்தெழுந்த காயத்ரி

(FASTNEWS|COLOMBO) – வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில்
‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம். அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.

இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.