புளுமெண்டலின் முக்கிய கர்த்தா சுசில் – சாடுகிறார் ரவி
புளுமெண்டல் பிரதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தின் பின்னணியாக இருப்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரமேஜயந்த என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான சூழ்ச்சியின் பிரதான பாத்திரம் சுசில் பிரேம ஜயந்த என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் புளுமெண்டல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
(riz)