சபீதா பெரேராவை இன்று(01) ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவுக்கு அழைப்பு

சபீதா பெரேராவை இன்று(01) ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவுக்கு அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – பிரபல சிங்கள நடிகையான சபீதா பெரேராவை இன்று(01) ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஆணைக்குழு செயலாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டி.பீ.ஜே. கட்டிடத்தினை விவசாயத் துறை அமைச்சுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் போது குறித்த கட்டிடத்தின் உரிமையாளராக ஆவணங்களில் சபீதா பெரேரா மற்றும் அவரது கணவன் கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த கொடுக்கல் வாங்கல்களில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பில் கடந்த 30ம் திகதி விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.