ஓமான், இலங்கைத் தூதரகத்தினால் புலம் பெயர் தொழிளாலர்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்
(FASTNEWS | COLOMBO) – ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், அந்நாட்டில் பணியாற்றும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக தொலைபேசி அழைப்பு சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக ஓமானுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல். அமீரஜ்வத் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி அழைப்பு சேவையானது கட்டணமில்லாத தொலைபேசி, வாட்ஸ்அப், இமோ, மெசேஜிங் மற்றும் குறுஞ் செய்திகள் போன்ற பல்வேறு வகையான தொடர்பு முறைகளை உள்ளடக்கியுள்ளது என தூதுவர் மேலும் விளக்கினார்.
ஓமானில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கு இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.