ஓமான், இலங்கைத் தூதரகத்தினால் புலம் பெயர் தொழிளாலர்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்

ஓமான், இலங்கைத் தூதரகத்தினால் புலம் பெயர் தொழிளாலர்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்

(FASTNEWS | COLOMBO) – ஓமான் நாட்­டுக்­கான இலங்கைத் தூத­ரகம், அந்­நாட்டில் பணி­யாற்றும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்­கு­வ­தற்­காக தொலை­பேசி அழைப்பு சேவை ஒன்றை அறி­முகம் செய்­துள்­ளதாக ஓமா­னுக்­கான இலங்கை தூதுவர் ஓ.எல். அமீ­ரஜ்வத் தெ­ரி­வித்தார்.

இந்த தொலை­பேசி அழைப்பு சேவை­யா­னது கட்­ட­ண­மில்­லாத தொலை­பேசி, வாட்ஸ்அப், இமோ, மெசேஜிங் மற்றும் குறுஞ் செய்­திகள் போன்ற பல்­வேறு வகை­யான தொடர்பு முறை­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது என தூதுவர் மேலும் விளக்­கினார்.

ஓமானில் வசிக்கும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்கள் தொழி­லாளர் விவ­கா­ரங்கள் தொடர்­பான சேவை­களைப் பெறு­வ­தற்கு மஸ்­கட்டில் உள்ள இலங்கை தூத­ர­கத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­கொள்­வ­தற்கு இந்த முறை­களில் ஏதேனும் ஒன்றைப் பயன்­ப­டுத்­தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.