தனியார் பேரூந்து துறையினர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

தனியார் பேரூந்து துறையினர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

(FASTNEWS | COLOMBO) – தனியார் பேரூந்து துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தலையீடு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கப்பம் வழங்குவதற்காக மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு வருடாந்தம் 240 கோடி ரூபா செலவாவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.