துமிந்த திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

துமிந்த திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய துமிந்த திசாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

விவசாய அமைச்சுக்கான கட்டடத்தை அதிக விலையில் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.