பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு

பல்கலைக்கழக வார இறுதி நடவடிக்கைகள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பணிபகிஷ்கரிப்பு 12 நாளாக தொடர்கிறது, வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதன் காரணமாக பல்கலைகழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.