மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் இந்த தீ விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.