ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் முடிவு

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ப்ரெக்ஸிட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பில் ஒரு முடிவை எட்டவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இந்த அமர்வை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.