விஜய் – அதர்வா உறவுக்காரர்களாக இணையுமா

விஜய் – அதர்வா உறவுக்காரர்களாக இணையுமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலிக்கிறார். இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். எனவே கூடிய விரைவில் அதர்வாவின் தம்பிக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் , இரு குடும்பமும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என எண்ணி தன் தம்பிக்காக முன்னின்று விஜய் அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் அதர்வா பேசி வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தம்பி ஆகாஷிற்கு இந்த திருமணம் நடந்துவிட்டால் விஜய்யின் நெருங்கிய உறவினர்களாக ஆதர்வா குடும்பத்தினர் பார்க்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.