பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாக பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத்தலைவர் டம்மிக எஸ்.பிரியன்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு மாத காலப்பகுதியில் சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.