தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம் நாளை முதல்

தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம் நாளை முதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உத்தியோகபூர்வ தபால் மூல வாக்காளர் அட்டைகள் மிகவும் பாதுகாப்புடன் விநியோகிப்பதற்காக தபால் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, குறித்த தபால் மூல வாக்காளர் அட்டைகள் பாதுகாப்பான பொதிகளில் நாளை(22) முதல் உறுதி செய்யும் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.