இலங்கை அணியின் பொறுப்பு ராம்பிரகாஷுக்கு

இலங்கை அணியின் பொறுப்பு ராம்பிரகாஷுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

50 வயதாகும் ராம்பிரகாஷ் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2350 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க அவர் ஆர்வமாக இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.