ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் நோயின் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.