டி-20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

டி-20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லக்னோவில் நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுபெடுத்தாட தேர்வு செய்தது.

இதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.